Saturday, May 2, 2009

மலர்வாய்...


அந்தியில் மறையும் கதிரவன்
அதிகாலை மலர்ந்த மலரை கண்டு
சொன்னது
நான் மறைகிறேன்
நீ மலர்கிறாய் .....

கவிதை ....

பக்கம் பக்கமாய் கவிதை எழுதினேன்
அவை அனைத்தும் பறந்து போனது
உன் கண்கள் தீட்டிய கவிதையால் .....

உன் புகழ் ...

கேளாத காதும் கேட்கும்
உன் மௌன மொழியை
காணாத கண்ணும் காணும்
உன் முக சிரிப்பை
பேசாத இதழும் பேசும்
உன் பெயர் சுவையை .....

தேடினேன் ...


எங்கெங்கோ தேடினேன் எங்கயும் நீ இல்லை
எப்பொழுதும் தேடினேன் ஒரு பொழுதும் நீ இல்லை
என்னாலும் தேடினேன் ஒரு நாளும் நீ இல்லை
பின்பு
என்னுள் தேடினேன் மலராய் மலர்ந்திருந்தாய்
மகிழ்ச்சியில் துளைத்தேன்
மனதையும் துளைத்தேன்
மகிழ்ச்சியோடு !!!!!!!

கனவு ...


கனவுகளோடு கவிதை எழுதினேன் என் காதலிக்காக
கனவுகள் களைய காணமல் போனது
கவிதை அல்ல என் காதலி ......

சுனாமி ...


பறவையே உன்னால் மட்டும் தான் பறக்க முடியுமா ?
என்னாலும் முடியும் என்று உயர பறந்தது கடல்
அதன் விளைவுதன் சுனாமி ......

Wednesday, March 11, 2009

அர்ச்சனை ...


"அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு
அதிர்ஷ்டங்களை தரச்சொல்லி வேண்டினால்
என் தெய்வம் அதிர்ஷ்டங்களை தல்லி வைத்து
அர்ச்சனைகளை வாங்கித் தருகிறது
தினமும் அம்மா விடம் !!!! "

Wednesday, March 4, 2009

என்னுள் நீ ....


"என்னுள் நீ , உன்னுள் நான்(?)
என்றிருக்கும் போது
நீ நலம் இல்லை என்றால்
உனக்குள் இருக்கும்
நான் மட்டும் எப்படி நலமாய் இருப்பது
பத்திரமாக பார்த்துக்கொள்
உன்னையும் உன்னுள் இருக்கும் என்னையும் !!!!!!"

உணர்வுகள் ....


"உடலால் பிரிந்திருந்தலும்
உணர்வுகளால் ஒன்றாய் இருந்தோம்
இன்று என் உணர்வுகளும் துடித்தன
உன் உடல் நிலை சரி இல்லாததால் !!!!!!!!"

கொடியது ....


"மரணத்திலும் கொடியது


தோழி நலமாய் இல்லை


என்றறிந்தும் நாடிச் சென்று


பேசி பார்க்க முடியாத நிலை !!!!!"

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008