Sunday, February 22, 2009

தோழியே....


"கல்லூரியில் ஒன்று சேர்ந்தோம்
வகுப்பறையில் விவாதம் செய்தோம்
சாலையில் ஒன்றாய் நடை பயின்றோம்
உணவை ஒன்றாய் பரிமாறினோம்
பேருந்தில் ஒன்றாய் பயணித்தோம்
சண்டைகளுக்கும் பஞ்சமில்லை
சமாதானமும் உடனே இல்லை
எதிரும் புதிருமாய் இருந்தாலும்
இணைந்தே இருந்தோம்
என்னை நீ அறிந்தாய்
உன்னை நான் உணர்ந்தேன்
அனைவரும் நம்மை அறிவர்
நல்ல தோழிகள்  என்று
பேசாத நாளே இல்லை என்பது போய்
பேசியது எந்த நாள் என்றானது
ஏனோ பிரிந்தோம்
மறுபடி சேர்வோமா ????????? "

0 comments:

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008